தஞ்சாவூர்

பேராவூரணி அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் சாவு

DIN

பேராவூரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பேராவூரணியை அடுத்த அடைக்கத்தேவன் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ. ராஜமாணிக்கம் (45).  அரியலூரில்  சிமெண்ட் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர்,  அடைக்கத்தேவன் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் புதன்கிழமை மாலை நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மணமேல்குடி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து,  மதுரை  ராஜாஜி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை  ராஜமாணிக்கம்  உயிரிழந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  ராஜமாணிக்கத்துக்கு மனைவி உஷா( 40) மற்றும் திருமணமாகாத 4 மகள்கள் உள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT