அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதி, கரந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தலைமை வகித்தார். இதில் எம்பிக்கள் ஆர். வைத்திலிங்கம், கு. பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்பகுதி செயலாளர்கள் சரவணன், அறிவுடைநம்பி, அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள், வாக்கு சேகரிப்போர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்த கையேட்டினை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, அதிமுக வாக்குச்சாவடி முகவர்களிடம் வழங்கி, வாக்கு சேகரிப்பது குறித்து பேசினார்.