தஞ்சாவூர்

பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு

DIN

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்த ஜான் பிரிட்டோ மகன் ஆண்டனி (26), தஞ்சாவூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (25).  இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டைக்கு சென்றுவிட்டு,  பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
இதனிடையே,  புதூர் குப்பையன் தெரு குப்புசாமி மகன் பாஸ்கர்(45) என்பவர் இருசக்கர வாகனத்தில் புதூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றார். புதூர் அம்மாமுத்த குளம் அருகே இந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆண்டனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
பலத்த காயமடைந்த சூர்யா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,  பாஸ்கர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT