தஞ்சாவூர்

மக்கள் நல அரசாக மாநில அரசு செயல்படுகிறது: ஜி.கே. வாசன்

DIN

மக்கள் நல அரசாக மாநில அரசுச் செயல்படுகிறது என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜன், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் பேசியது:
தஞ்சை மக்கள் அளிக்கும் வாக்கு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். மக்கள் நல அரசாக மாநில அரசுச் செயல்படுகிறது. ஒத்தக் கருத்துடைய அதிமுக, பாஜக அரசு வெற்றி பெற்றால், நல்லத் திட்டங்கள் தொடரும். தஞ்சாவூர் மாநகராட்சி பொலிவுறு நகராக வளர்ந்துள்ளது. 
தஞ்சாவூர் தொகுதியில் தமாகா வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் அளிக்கும் வாக்கு. ஏழை மக்களின் நலன் காக்கும் அரசு அதிமுக அரசு.  அரசின் திட்டங்கள் தொடர மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கும், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காந்திக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் வாசன். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ரயிலடி வரை அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது, தமாகா மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் சந்திரசேகர மூப்பனார், எஸ். சுரேஷ் மூப்பனார், பொதுக் குழு உறுப்பினர் சுதாகர் மூப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT