தஞ்சாவூர்

மாநில இறகுப்பந்துப் போட்டி: அதிரை அரசுப் பள்ளி மாணவர் சாதனை

DIN


சென்னையில் நடைபெற்ற  மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில், அதிரை அரசுப் பள்ளி  மாணவர் அ. ஆத்திப் அகமது சாதனை நிகழ்த்தினார்.
சென்னை வேலம்மாள் வித்யாலயத்தில் மாநில அளவில் இடைநிலைப் பள்ளி சிறார்களுக்கான இறகுப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும்  மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர் அ. ஆத்திப் அகமது, 10- வயதுக்குள்பட்டோர் பிரிவில் 4ஆம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தினார். இதற்காக பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவரின் தந்தை  ஆ. அஜுமுதீன் , அதிராம்பட்டினம் காதர் முகûதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாறறி வருகிறார். மாணவரை பள்ளித் தலைமையாசிரியர் எஸ். மாலதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT