தஞ்சாவூர்

சிலை கடத்தல் வழக்கு: கிரண் ராவ் ஆஜர்

DIN

சிலை கடத்தல் வழக்குத் தொடர்பாக தொழிலதிபர் கிரண் ராவ் கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார். 
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கிரண் ராவ் (54). இவரது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு உலோகம் மற்றும் கற்சிலைகள் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததைத் தமிழகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.
இச்சிலைகள் குறித்து விளக்கம் தர வேண்டும் என கிரண்ராவ்க்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் கிரண்ராவ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரண்ராவ் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி, திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், மேலும், வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் டிச. 21-ம் தேதி உத்தரவிட்டது.
இதன்படி, கிரண் ராவ் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகி திருக்கருக்காவூர் மாளிகைத் திடலைத் சேர்ந்த இருவரை ஜாமீன்தாரர்களாகவும், மேலும் ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகைக்கான பத்திரத்தையும் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT