தஞ்சாவூர்

சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

இந்து மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் சிவசேனா கட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இந்து மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் புலவஞ்சி போஸ் பேசினார். 
மாநில அமைப்பாளர் தங்கமுத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலர் வேலு, நாம் இந்துக்கள் கட்சி நிறுவன தலைவர் கணேஷ்பாபு, இந்து இளைஞர் எழுச்சி பேரவைத் தலைவர் பழ. சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT