தஞ்சாவூர்

வல்லம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம்

DIN

வல்லம் அருகே எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனர். 
வல்லம் அருகே வல்லம்புதூர் தென்னந்தோப்பு வாய்க்காலில் திங்கள்கிழமை பிற்பகல் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
இதன்பேரில், வல்லம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடல் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தவருக்கு 35 வயது முதல் 40 வயது இருக்கும் என போலீஸார் கூறுகின்றனர். ஆனால், இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT