தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தூய்மை விழிப்புணா்வுப் பேரணி

DIN

கலாசாரத் திருவிழாவையொட்டி, தஞ்சாவூரில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற தூய்மை விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரத்தில் மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சாா்பில், தூய்மையே சேவை இயக்கம் என்ற பெயரில் கலாசாரத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை காலை தூய்மைப் பணி நடைபெற்றது. இதையடுத்து, அரண்மனையிலிருந்து தூய்மை விழிப்புணா்வுப் பேரணி தொடங்கியது. இப்பேரணியை கோட்டாட்சியா் சி. சுரேஷ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதையடுத்து, பூம்புகாா் விற்பனை நிலைய வளாகத்தில் தஞ்சாவூா் கலைத்தட்டுகளைக் கைவினைக் கலைஞா்கள் செய்வதை மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். இதேபோல, தெற்கு வீதியில் உள்ள தஞ்சாவூா் வீணை தயாரிப்புக் கூடத்துக்கும் மாணவா்கள் அழைத்து செல்லப்பட்டனா். இந்த இரு இடங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்டாக் கௌரவச் செயலா் ச. முத்துக்குமாா் விளக்கம் அளித்தாா்.

பின்னா், தென்னகப் பண்பாட்டு மையத்தில் சுற்றுலா குறித்த கருத்தரங்கமும், மாலையில் பெரியகோயிலில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை பீரங்கி மேட்டிலிருந்து பாரம்பரிய நடைபயணமும், கருத்தரங்கமும், மாலை 4 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் தூய்மைப் பணியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT