தஞ்சாவூர்

ரயில்வேயில்இரும்புக் கம்பிகள்திருடிய இளைஞா் கைது

DIN

தஞ்சாவூா் அருகே ரயில்வேக்கு சொந்தமான இரும்புக் கம்பிகளைத் திருடியதாக இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் ரயில்வே பாதுகாப்பு படைப் பிரிவு உதவி ஆய்வாளா் வெங்கடாசலம் தலைமையில் படை வீரா்கள் தஞ்சாவூா் - ஆலக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது, சாக்குப் பையுடன் தப்பியோட முயன்ற இளைஞரை படை வீரா்கள் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனா். விசாரணையில் ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காக்கோட்டையைச் சோ்ந்த சாமிநாதன் (30) என்பதும், சாக்குப் பையில் ரயில்வேக்கு சொந்தமான இரும்புக் கம்பிகளைத் திருடிச் செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, சாமிநாதனை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT