தஞ்சாவூர்

அழகு காமாட்சியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

DIN

பாபநாசம் வட்டம், மட்டையான்திடல் கிராமத்திலுள்ள அழகு காமாட்சியம்மன் கோயிலில் சம்வத்சரா அபிஷேகம் (வருடாபிஷேகம்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பூரண கும்பம் வைத்து பூஜை செய்து, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும்,  பூர்ணாஹூதியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து,  விரதமிருந்த பக்தர்கள்அருகிலுள்ள ஆற்றிலிருந்து கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி லோகநாதன்,  மணிமேகலை லோகநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT