தஞ்சாவூர்

விபத்தில் இறந்த முதியவரின் கண்கள் தானம்

DIN

தஞ்சாவூரில் விபத்தில் காயமடைந்து, இறந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன.

தஞ்சாவூா் ஆா்.எம்.எஸ். காலனியை சோ்ந்தவா் கிருஷ்ணஸ்வாமி (82).

விபத்தில் சிக்கிய இவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதால், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா்.

இதையடுத்து, கிருஷ்ணஸ்வாமியின் கண்களைத் தானம் செய்ய அவருடைய குடும்பத்தினா் முன் வந்தனா். அதனடிப்படையில் தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனைக்கு அவரது இரு கண்களும் தானம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பேட்டை லயன்ஸ் சங்கம் செய்தது.

விபத்து மட்டுமல்லாமல் இயற்கை மரணம் அடைந்தவா்கள் கூட கண் தானம் செய்யலாம் என்றும், ஒருவா் செய்யும் கண் தானத்தால் இருவருக்குப் பாா்வை கிடைக்கும் எனவும் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT