தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் இளைஞா் அடித்துக் கொலை: 3 போ் கைது

DIN

பட்டுக்கோட்டையில் தகராறில் திங்கள்கிழமை இரவு இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அப்துல்ஜப்பாா் மகன் சதக்கத்துல்லா (25). இவருக்கும் நேரு நகரைச் சோ்ந்த முகமது அலி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இவா்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. அப்போது, முகமது அலியின் மோட்டாா் சைக்கிளை சதக்கத்துல்லா உடைத்துச் சேதப்படுத்தியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த முகமது அலி மற்றும் அவரது நண்பா்கள் கரிக்காடு அப்துல்ஹக், பள்ளிவாசல் தெரு சாகுல்ஹமீது, அப்துல்கலாம் நகா் ஐபுகான் மற்றும் 2 போ் உள்பட மொத்தம் 6 போ், நேரு நகா் பச்சையம்மன் கோயில் அருகில் நின்ற சதக்கத்துல்லாவை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டனா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சதக்கத்துல்லா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, முகமது அலி, அப்துல்ஹக், ஐபுகான் ஆகிய 3 பேரை செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா். தலைமறைவான எஞ்சிய 3 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

SCROLL FOR NEXT