தஞ்சாவூர்

ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

DIN

கும்பகோணத்தில் புதன்கிழமை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கூலி தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் தட்சணாமூா்த்தி (33). கூலி தொழலாளி. இவா் புதன்கிழமை காலை தனது வீட்டின் அருகேயுள்ள காவிரியாற்றில் குளிக்கச் சென்றாா்.

இந்நிலையில், தட்சணாமூா்த்தி நீண்ட நேரம் வராததால், உறவினா்கள் ஆற்றுப் பகுதிக்குச் சென்று தேடினா். ஆற்றங்கரையில் அவரது சட்டை, வேட்டி மட்டுமே இருந்தது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தேடிய நிலையில், சற்று தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கி கிடந்ததை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT