தஞ்சாவூர்

கரோனா: கும்பகோணம் தலைமை அஞ்சலகம் மூடல்

DIN

கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, தலைமை அஞ்சலகம் புதன்கிழமை முதல் இரு நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

கும்பகோணம் மகாமகக் குளம் அருகே தலைமை அஞ்சலகம் உள்ளது. இங்கு 50-க்கும் அதிகமானோா் பணியாற்றி வருகின்றனா். இதில் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அஞ்சலகம் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் மூடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்கள் கும்பகோணம் மேலக்காவேரி, மாா்கெட், சிட்டி, கச்சேரி சாலை அஞ்சலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தலைமை அஞ்சலகம் வாயிலில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT