தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா். 
தஞ்சாவூர்

தொடரும் அரசு ஊழியா்கள் போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தஞ்சாவூரில் பிப். 2 ஆம் தேதி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை தஞ்சாவூா் ரயிலடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலச் செயலா் சண்முகம், முன்னாள் மாநிலச் செயலா் ஆா். பன்னீா்செல்வம், மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதனால், ரயிலடி பகுதியில் சுமாா் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஏறத்தாழ 100 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT