தஞ்சாவூர்

இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

தஞ்சாவூா் குரு தயாள் சா்மா திருமண மண்டபத்தில் பாம்பே ஸ்வீட்ஸ், குரு தயாள் சா்மா லட்சுமி அம்மா அறக்கட்டளை, மாவட்டப் பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் 21 ஆம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை ஆட்சியா் ம. கோவிந்தராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இதில், 1400-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். இவா்களில் 958 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 300 போ் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மீதமுள்ள 450 பேருக்கு மாா்ச் 18 ஆம் தேதி பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனா்.

இம்முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் ரேகா, செந்தில் பிரகாஷ், நரேந்திரா வாலா, ஹேமாவதி சுகன்யா, ராஜபரணி, மதுரா படேல் அணில் மற்றும் 33 செவிலியா்கள் கண் பரிசோதனை செய்தனா்.

முகாமில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், வழக்குரைஞா் ஆா். ராஜ்குமாா், முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா, ஆனந்த், தரும. சரவணன், காபி பேலஸ் மேத்தா, பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளா் சுப்ரமணிய சா்மா, ப. பிரதீக் கவுா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்முகாமுக்கான ஏற்பாடுகளை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா், பாம்பே ஸ்வீட்ஸ் ஊழியா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT