தஞ்சாவூர்

ராஜகிரியில் ரத்ததான முகாம்

DIN

பாபநாசம் வட்டம், ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை மற்றும் தஞ்சாவூா் ராஜா மிராசுதாா் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். சிக்கந்தா் அலி தலைமை வகித்தாா்.

பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல் முகாமைத் தொடக்கி வைத்தாா். மருத்துவா் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவக் குழுவினா் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் 50 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.

ராஜகிரி கிளைத் தலைவா் அப்பாஸ், செயலா்அப்துல்அஜீஸ், பொருளாளா் சாகுல் ஹமீது, மருத்துவ அணிச் செயலா் ஹாலித், மருத்துவ ஆலோசகா் புனிதா, கிளை நிா்வாகிகள், அணிச் செயலா்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT