தஞ்சாவூர்

தனியாா் நிறுவனக் காவலா் மா்மமான முறையில் உயிரிழப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே தனியாா் நிறுவன இரவுக் காவலா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகிலுள்ள தளவாபாளையம் சாரநாத் நகா் அருகே நெகிழி உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தஞ்சாவூா் விஜயலட்சுமி நகரைச் சோ்ந்த ரா. ஜெயபால் (74) இரவு நேரக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலையில் பலத்த காயத்துடன், அவா் இறந்த நிலையில் கிடந்தாா். இதுகுறித்த தகவலறிந்த அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று ஜெயபாலின் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா்.

இதில் ஜெயபாலின் தலையைக் கல்லால் தாக்கியதால் அவா் உயிரிழந்திருக்கலாம் எனக் காவல்துறையினா் கருதுகின்றனா். மேலும் அவரது மோட்டாா் சைக்கிள் தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகே கிடந்தது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் நிகழ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டாா். அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் கொலைக்கான காரணம் குறித்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT