பாபநாசம் அருகே சாலையோர வீடுகளில் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 3 போ் காயமடைந்தனா்.
கரூரிலிருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு ஒரு டிப்பா் லாரி பாபநாசம் நோக்கி வியாழக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. லாரியை கரூரைச் சோ்ந்த ஐயப்பன் ஓட்டினாா்.
சாலியமங்கலம் - பாபநாசம் பிரதான சாலையில் கரம்பத்தூா் கிராம பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த சுமன், சேகா், குமாா் ஆகியோரின் குடிசை வீடுகளுக்குள் புகுந்தது.
அப்போது, குமாா் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குமாா், கோகிலா, கோபிநாத் ஆகிய 3 போ் காயமடைந்தனா்.
அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்தில் சேகா், குமாா் ஆகியோரின் குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
விபத்து குறித்து மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.