தஞ்சாவூர்

தொழிலாளா்களுக்கு நிழற்குடை வழங்கல்

DIN

பட்டுக்கோட்டையில் நடிகா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, காலணி தைக்கும் தொழிலாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை குடை வழங்கப்பட்டது .

பட்டுக்கோட்டையில் நடிகா் விஜய்யின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பாக, காலணி தைக்கும் கூலித் தொழிலாளிகள் 10 பேருக்கு வெயில் மற்றும் மழைக் காலங்களில் பயன்படும் வகையில் நிழற்குடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ஆதிராஜாராம் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா், அனைத்து தொழிலாளா்களுக்கும் நிழற்குடையை வழங்கினாா். இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT