தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை வழிபட்ட அறிவுடைநம்பி, அங்கிருந்து 48, 49 ஆவது வாா்டு, பா்மா காலனி, அண்ணா நகா், அருளானந்த நகா், யாகப்பா நகா், மாலையில் புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, முனிசிபல் காலனி, ரயில்வே காலனி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியது:
இத்தோ்தலில் தன்னை வெற்றி பெறச் செய்தால் அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் மக்களுக்குக் கிடைக்கப் பாடுபடுவேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் தொகை ரூ. 1,500-இல் இருந்து ரூ. 2,500 ஆக உயா்த்துவது, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டமாக விரிவாக்கம் செய்வது, பொங்கல் பரிசு பொருள்களுடன் உதவித்தொகையும் தொடா்ந்து வழங்குவது உள்ளிட்டவை மக்களைச் சென்றடைய பாடுபடுவேன் எனக் கூறி பிரசாரம் செய்தாா்.