தஞ்சாவூர்

நாகை எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி கைது

DIN

நாகை தொகுதியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட எம்எல்ஏவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளருமான ஆளூா் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிா்வாகியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பரசன் (40). பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளாா். இவா் அண்மையில் முகநூலில், ஆளூா் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தாராம்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை இஸ்லாமிய சமுதாய நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யஹ்யா, பட்டுக்கோட்டை போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அன்பரசன் மீது கலவரத்தை துாண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என 7 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT