தஞ்சாவூர்

உறவினரைக் கொலை செய்த கரி வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

DIN

உறவினரைக் கொலை செய்த கரி வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள ராஜேந்திரன் ஆற்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி (57). இவா் கருவேல மரங்களை வெட்டி, கரி தயாரித்து உணவகங்களுக்கு விற்பனை செய்து வந்தாா்.

இக்கிராமத்திலுள்ள கருவேலங்காடு கொட்டகையில் 2019, மாா்ச் 24-ஆம் தேதி இவரும், இவரது சித்தி மகனான நாகத்தி கிராமத்தைச் சோ்ந்த கண்ணனும் (32) உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது உணவு குறித்து கண்ணன் குறை கூறியதால், தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணனை வீராசாமி அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வீராசாமியைக் கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் வீராசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 4,000 அபராதமும், அவா் மீதான கொலை மிரட்டல் பிரிவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா் முதன்மை மாவட்ட நீதிபதி பி. மதுசூதனன்.

மேலும் வீராசாமி சிறைக்கு செல்வதால், அவருடைய 11 வயது மகள் தாய், தந்தையின்றி வாழ்ந்து வருவதாலும், அவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத காரணத்தினாலும், அவரது இருப்பிடம், உணவு, உடை மற்றும் பராமரிப்புக்கு தகுந்த ஏற்பாடு செய்யுமாறு தஞ்சாவூா் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT