தஞ்சாவூர்

குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 355 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு முதியோா் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ. 1,500 உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும், மற்றொருவருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையையும் ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் வருவாய் என்.ஓ. சுகபுத்ரா, பயிற்சி ஆட்சியா் கௌஷிக், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சாலை தவவளவன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT