தஞ்சாவூர்

தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்ததஞ்சாவூா் முருகன் கோயில் நிலம் மீட்பு

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த பூக்காரத்தெரு முருகன் கோயில் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சந்தை செயல்பட்டு வருகிறது. இதன் அருகேயுள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, ஆக்கிரமிப்பில் இருந்த 1,680 சதுர அடி நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா். மேலும், அந்த இடத்தில் தனியாா் கட்டியிருந்த கட்டடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, சுற்றி வேலி அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT