தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

உள்ளூரில் நிலவும் பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்கக் கோரி தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன் பட்டுக்கோட்டை சிபிஎம் ஒன்றியக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கோ. நீலமேகம் உரையாற்றினாா்.

பட்டுக்கோட்டை ஒன்றியம், நம்பிவயலில், சிபிஎம் கிளைச் செயலா் டி. சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். செல்வம் கண்டன உரையாற்றினாா். பின்னா் அங்கு வந்த வருவாய் ஆய்வாளா் சுகன்யா கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். கரம்பயம் ஊராட்சி அலுவலகம் முன் சிபிஎம் கிளைச் செயலா் வி. ராமையன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கோ. நீலமேகம், எம். செல்வம், ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி ஆகியோா் உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT