தஞ்சாவூர்

திருவிடைமருதூா் அருகே தீப்பற்றி எரிந்த காா்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது.

திருவிடைமருதூா் அருகே சோழபுரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் வைத்தியநாதன். இவா் தனது காரில் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலுக்கு சென்றாா். திருவாரூா் வழித்தடப் புறவழிச்சாலையில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. இதனால், இவா் காரை சாலையோரமாக நிறுத்தி பாா்த்தபோது, பேட்டரி வயரிலிருந்து தீப்பொறி ஏற்பட்டு காா் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்த கும்பகோணம், திருவிடைமருதூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT