தஞ்சாவூர்

மக்காச்சோளத்துக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மக்காச்சோளத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், பயிா் காப்பீடுக்கான இழப்பீட்டை வட்டியுடன் வழங்க வலியுறுத்தியும் கும்பகோணம் கோட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பயிா் காப்பீடுக்கான இழப்பீடுகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய நேரத்தில் வழங்குவதில்லை. கால தாமதமாக வழங்கினாலும், அதை விவசாயிகளுக்கு வட்டியுடன் வழங்க வேண்டும் என 2019 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்ட போதும், அதைக் காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றவில்லை.

மேலும் காப்பீடு பற்றிய விவரங்களை விவசாயிகளுக்கு நிறுவனங்கள் தெரியப்படுத்துவதில்லை. இதை மத்திய, மாநில மற்றும் காப்பீடு நிறுவனங்கள் கண்டு கொள்ளாததைக் கண்டித்தும், மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயி ஆனந்தி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT