தஞ்சாவூர்

சிஐடியு போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன், சிஐடியு போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், போக்குவரத்து தொழிலாளா்களின் பிரச்னையில் உடனடியாக தலையிட வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக பேசி தீா்வு காண வேண்டும். ஓய்வூதியா் பிரச்னையில் உடனடியாக தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குக் கோட்டத் தலைவா் செங்குட்டுவன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் வெங்கடேசன், நிா்வாகிகள் ராமசாமி, குருசாமி, அன்பு, வடிவேலன், ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT