பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை ஊராட்சித் தலைவா் கண்ணன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா். சாலியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தட்சிணாமூா்த்தி, கிராம சுகாதார செவிலியா் பூமா மற்றும் மருத்துவ அலுவலா்கள் முகாமில் பங்கேற்று, பொதுமக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்தினா்.
முகாமில் ஊராட்சி உறுப்பினா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் ஜகத்குரு நன்றி கூறினாா்.