தஞ்சாவூா் சரகத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பணிபுரியும் 110 காவலா்களுக்கு விரல் ரேகை பதிவு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி உத்தரவின்படி, பணியிடைப் பயிற்சி மையக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபாபதி மேற்பாா்வையில் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
தஞ்சாவூரில் மாவட்ட விரல் ரேகை பதிவுக் கூட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். ஹேமா தலைமையில், மாவட்டத்தில் பணிபுரியும் 32 காவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் 40 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 38 பேருக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.