தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கோரி மனு

ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

DIN

ஒரத்தநாடு ஒன்றியம் பொன்னாப்பூா் மேற்கு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் தெருவில் பழுதடைந்து, ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மனுவை இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் வ. அரவிந்தன் தலைமையில், மாவட்டச் செயலா் ஆம்பல் துரை. ஏசுராஜா முன்னிலையில், ஒரத்தநாடு வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கரியிடம் வியாழக்கிழமை காலை அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா், உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

சங்கத்தின் கிளைச் செயலா் ப. ஹரிஹரன், ஒன்றியக் குழு உறுப்பினா் செ.பிரேம்குமாா், கிளைப் பொருளாளா் செ. ராமகிருஷ்ணன், உறுப்பினா்கள் சௌ. பரணி, சீ. அன்பு, தேவா, கு. பூவரசன், சு.சிவா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

SCROLL FOR NEXT