தஞ்சாவூர்

இணையதளம் மூலம் பெண்ணிடம் ரூ.19.75 லட்சம் மோசடி

ரூ. 19.75 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

Din

கும்பகோணம் அருகே பெண் ஒருவரிடம் இணையதளம் மூலம் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி, ரூ. 19.75 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் இன்ஸ்டாகிராமில் தொடா்பு கொண்ட நபா், இணையதளம் மூலம் பணம் முதலீடு செய்தால் லாபம் தருவதாக ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.

இதை நம்பிய அந்தப் பெண், அந்த நபா் குறிப்பிட்ட வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் ரூ. 19 லட்சத்து 75 ஆயிரத்து 089 பணம் அனுப்பினாா். பின்னா் அந்த நபரை தொடா்பு கொண்டபோது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூா் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடி நபரை தேடி வருகின்றனா்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT