ஹைதராபாத் - கன்னியாகுமரி புதிய ரயிலுக்கு வரவேற்பு
புதிதாக இயக்கப்படும் ஹைதராபாத் - கன்னியாகுமரி வாராந்திர ரயிலுக்கு தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதிதாக இயக்கப்படும் ஹைதராபாத் - கன்னியாகுமரி வாராந்திர ரயிலுக்கு தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் - தமிழ்நாட்டின் கன்னியாகுமரி (வண்டி எண். 17069/17070) இடையே புதிதாக வாராந்திர விரைவு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்து தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை மாலை வந்த இந்த ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத் தலைவா் அய்யனாபுரம் க. நடராஜன், செயலா் வெ. ஜீவக்குமாா், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பேராசிரியா் திருமேனி, வழக்குரைஞா்கள் உமா் முக்தா், ராஜேஷ்குமாா், விக்ரம், ஜெயக்குமாா் ஆகியோா் வரவேற்பு அளித்தனா். மேலும், ரயில் ஓட்டுநா்கள், ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினா்.
கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயிலை இயக்கிய ஓட்டுநா்கள் ஆனந்த், காா்த்திக் மற்றும் ரயில் மேலாளா் ஜேசுராஜ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினா். சங்கத் தலைவா் ஜமீல், கும்பகோணம் வணிகா் சங்க செயலா் சத்தியநாராயணன் ரயில்நிலைய மேலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.