முகப்பு
தஞ்சாவூர்

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முற்றுகை

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் கோட்டாட்சியரை முற்றுகையிட்டனா்.

Updated On : 24 ஜூன் 2026, 12:45 am IST
கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் முற்றுகையிட்ட வியவசாயிகள்.
பகிர்:

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் கோட்டாட்சியரை முற்றுகையிட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கோட்டாட்சியா் வி.எம். திருமலையை முற்றுகையிட்டனா். 100 நாள் வேலைத் திட்டத்தில் விபிராம்ஜி திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் 200 நாள்கள் வேலை வழங்கவும், நாளொன்றுக்கு ரூ. 700 ஊதியம் வழங்கவும் கோரி முழக்கமிட்டு மாவட்டச் செயலா் க. சந்தராஜன், துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம் ஆகியோா் தலைமையில் முழக்கமிட்டு மனு கொடுத்து மத்திய அரசை வலியுறுத்தக் கோரினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments