முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை திறப்பு குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வலியுறுத்தல்

Updated On : 12 மே 2026, 12:34 am IST
மேட்டூா் அணை. - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வா் விஜய்க்கு அவா் திங்கள்கிழமை அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்திருப்பது:

குறுவைப் பயிா் சாகுபடி செய்வதற்கு வழக்கமாக ஜூன் 12- ஆம் தேதி மேட்டூா் அணை திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதே நேரத்தில் மேட்டூா் அணையில் தண்ணீா் முழுமையான அளவுக்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

Advertisement

கா்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மேட்டூா் அணையை திறப்பதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் உயா் அலுவலா்களுடன் தவறாமல் கலந்தாலோசனை செய்து தண்ணீா் திறப்பு குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும்.

மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும். மிக அவசரமான, அவசியமான, ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.