திருச்சி

திருச்சி அருகே பெண் குத்திக் கொலை

DIN

திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்  வியாழக்கிழமை அதிகாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி குழுமணி பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பின்புறம் வயல் வெளியில் வியாழக்கிழமை அதிகாலை ரத்தக் காயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
 தகவலறிந்து வந்த  போலீஸார்  சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த  மாலா என்கிற மாலதி (40) என்பது தெரியவந்தது. மாலதிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டதால் மாலா  கண்ணில் படுபவரையெல்லாம்  திட்டுவாராம்.  இதேபோல், புதன்கிழமை இரவும்  திட்டியதால், அருகில் உள்ள மதுக்கடையில் மது அருந்திய நபர்கள் தங்களை திட்டுவதாக நினைத்து  ஆத்திரமடைந்து கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT