திருச்சி

மழபாடி டைம்ஸ் சிறார் மேம்பாட்டு இதழ் சிறப்பு மலர் வெளியீடு

DIN

மழபாடி டைம்ஸ் சிறார் மேம்பாட்டு இதழின் 2ஆம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி மேலரண் சாலையில் உள்ள திருச்சி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற  விழாவில், மழபாடி டைம்ஸ் மணிக்கடிகையை  அருள்மிகு ஜயமங்கள மஹாப்ரத்யங்கிரா தேவி பீடத்தின் குருஜி கல்யாணராம பட்டாச்சார்ய சுவாமிகள் திறந்து வைத்து ஆசியுரை வழங்கினார்.
2ஆம் ஆண்டு சிறப்பு மலரை திருச்சி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி இயக்குநர் க. நடராஜன் வெளியிட, மத்திய அரசு வழக்குரைஞர் ப. சங்கரன் பெற்றுக் கொண்டார். பின்னர், இருவரும் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், 4 முதல் 7ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த எங்கள் பள்ளி, நல்ல பள்ளி என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடித்த ரா. குருலட்சுமி, பு. லட்சமி ஷிவானி, மு. மஹாசரஸ்வதி, காவ்யா ஸ்ரீ  ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல, 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த எனக்குப்பிடித்த அறிவியல் அறிஞர் எனும் கட்டுரைப் போட்டியில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரா. பரத்குமார், நா. அன்னலட்சுமி, என். திவ்யதர்ஷினி, ச. அன்புச்செல்வன், ம. ஜனனி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மழபாடி டைம்ஸ் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT