திருச்சி

துறையூர் அருகே லாரி கவிழ்ந்து 4 பேர் காயம்

DIN

துறையூர் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 4 பேர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வ. முத்து என்கிற சுடலையாண்டி (35), லாரி ஓட்டுநர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பனுக்கு சொந்தமான லாரியில் துறையூர் அருகேயுள்ள வைரிசெட்டிப்பாளையத்தில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரி செல்லும்போது சிக்கத்தம்பூர் எம்ஜிஆர் சிலை அருகே  லாரி கவிழ்ந்தது. 
இதில் ஓட்டுநர் முத்து, பூதக்குடியைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநர் ம. ராமகிருஷ்ணன்(35), லெ. முத்துக்குமார்(17), தா. முத்தம்பெருமாள் (32) ஆகியோர் காயமடைந்தனர். 
லாரியில் இருந்து காயமின்றி தப்பிய அ. மணிகண்டன் (32) துறையூர் அரசு மருத்துவமனையில் அவர்களைச் சேர்த்தார். உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT