திருச்சி

ரயிலிலிருந்து தவறி விழுந்து பொறியாளர் சாவு

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பொறியாளர் உயிரிழந்தார். 
திண்டுக்கல் மாவட்டம் பி.கே.புதூர் தெய்வசிகாமணிபுரம் பகுதியில் வசித்து வந்த ஜான் சேவியர் மகன் மோசஸ் ஜெயசிங் (32). கட்டுமானப் பொறியாளரான இவர், செவ்வாய்க்கிழமை இரவு சென்னை விரைவு ரயிலின் முன்பதிவு இல்லா பெட்டியில் ஏறினார். 
மணப்பாறை பகுதியில் ரயில் வந்துகொண்டிருந்தபோது,  கதவின் அருகே நின்றுகொண்டிருந்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
 இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு சக பயணிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு புதன்கிழமை காலை வந்த திருச்சி ரயில்வே காவல் உதவியாளர் லட்சுமி தலைமையிலான போலீஸார், மோசஸ் ஜெயசிங் சடலத்தை  மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT