சாலை விபத்தில் ஓட்டுநர் சாவு
திருச்சியில் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஓட்டுநர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருச்சியில் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஓட்டுநர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் தேவாங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து சத்திரம் பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். கம்பரசம்பேட்டை காளியம்மன் கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் கோபாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து திருச்சி போக்குவரத்துப் புலனாய்வு வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.