வெளிமாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது
முசிறி அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
முசிறி அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
தா.பேட்டை காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைவீதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நாகராஜ் (37), ரவிசந்திரன்(42) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.