திருச்சி

கார் கவிழ்ந்து பைனான்சியர் பலி

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இளைஞர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராமகிருஷ்ணன்(34). இவர், ஆந்திர மாநிலத்தில் பைனான்ஸ் நடத்தி வந்தார். 
சொந்த ஊருக்கு வந்திருந்த ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வயலூர், ஸ்ரீரங்கம் கோயில்களுக்குச் சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பியுள்ளார்.  வையம்பட்டி அடுத்த அம்மாபேட்டை அருகே சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராமகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT