திருச்சி

சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைத்து தரக் கோரிக்கை

DIN


 மணப்பாறை அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் ஆபத்தான மின்கம்பம் உள்ளது  .
விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகர் பகுதியிலிருந்து மில் பழைய காலனி, புது காலனி, தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவில்பட்டி சாலைக்கு செல்லும் பிரதான வண்டி பாதை உள்ளது. பாதையின் ஓரங்களில் உள்ள மின் கம்பங்கள் சிமென்ட் மேற்பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானலும் விழுந்துவிடலாம் என்ற நிலையில் உள்ளது.  இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லையாம். விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT