திருச்சி

அகத்தீசுவரா் கோயிலில் 2,008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு

DIN

மணப்பாறை சௌந்தரநாயகி உடனுறை அகத்தீசுவரா் கோயிலில் திங்கட்கிழமை மஹா தீபாராதனை மற்றும் 2008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மணப்பாறையில் காா்த்திகை மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு, அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ அகத்தீசுவரா் கோயிலில் திங்கட்கிழமை மாலை அகத்தீசுவரா், செளந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மஹா தீபாராதணை நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோயில் முழுவதும் இறையன்பா்களால் 2008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டது. கோயில் முகப்பு மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த லிங்க வடிவத்தினைச் சுற்றியும் தீபங்கள் ஏற்றப்பட்டு பஞ்ச வாத்தியங்கள் முழங்கின. நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பக்தா்கள் திரளாகப் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT