திருச்சி

சேலம் மாநாட்டுக்கு  ஏர்கலப்பையுடன்  சென்ற விவசாயிகள்

DIN

சேலத்தில் நடைபெறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க முசிறி பகுதி விவசாயிகள் புதன்கிழமை ஏர்கலப்பையுடன் புறப்பட்டுச் சென்றனர்.
வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துப் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய விளைப்பொருள்களுக்கு உற்பத்தி செலவைவிட 50 சதவிகிதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில்  சங்க நிர்வாகி சண்முகம் தலைமையில் 6 பெண்கள் உள்பட 41 விவசாயிகள் ஏர்கலப்பையுடன் முசிறியிலிருந்து புதன்கிழமை சேலம் புறப்பட்டுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT