மணப்பாறையில் சங்கமம் யோகா ஆரோக்கிய மையம் சார்பில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் குறிஞ்சி பொறியியல் தொழிற்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியினை கல்லூரி முதல்வர் முனைவர்.வி.பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தார். இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 15 பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் யோகாசனத்தில் தங்களது தனித்திறமைகளை செய்து காட்டினர். ஏற்பாடுகளை சங்கமம் யோகா ஆரோக்கிய மையத்தின் செயலர் ஆர். நித்யா ராஜேஸ்வரன் மற்றும் கலை சங்கமம் செயலர் வெ.பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.