திருச்சி

மது போதையில் தகராறு: இருவர் குத்திக் கொலை

DIN

திருச்சியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் செவ்வாய்க்கிழமை இரவு இருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
தேவதானம், பிள்ளையார் கோயில்தெருவைச் சேர்ந்தவர் ரா. பிரகாஷ்குமார் ( 34) பெயிண்டர்.  கீழரண்சாலை விறகுப்பேட்யைச் சேர்ந்தவர் ஆ. ராஜ்குமார்(38) சுமை தூக்கும் தொழிலாளி.  நண்பர்களான இருவரும், செவ்வாய்க்கிழமை இரவு தேவதானம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் மதுஅருந்திவிட்டு நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர்  ஜெகநாதனிடம் (35) இருவரும் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஜெகநாதன், அங்கிருந்து சென்று,  ஆதரவாளர்கள் 4 பேருடன் மீண்டும் சம்பவ இடத்துக்கு  வந்துள்ளார்.
அப்போது, அங்கு நின்றிருந்த பிரகாஷ்குமார், ராஜ்குமார் இருவரையும் கட்டை மற்றும் கம்பியால் தாக்கியும் கத்தியாலும் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து,  விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
சரண்: தப்பியோடிய ஜெகநாதன் கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT