திருச்சி

தொட்டியம் அருகே குடிநீர் கோரி மறியல்

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள்  வெள்ளிக்கிழமை  சாலை மறியல் செய்தனர். 
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் நாகையநல்லூர் ஊராட்சி கல்லூர்ப்பட்டி கிராமம் 2 வது வார்டில் உள்ள இரு ஆழ்துளை கிணறுடன் கூடிய மின் விசைப் பம்பு பழுதடைந்ததால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காவிரி குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால்  கோபமடைந்த கல்லூர்ப்பட்டி பகுதி மக்கள் தொட்டியம் - காட்டுப்புத்தூர் சாலையில் ஆணைக்கல்பட்டி என்ற  இடத்தில் மறியல் செய்தனர். 
தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் நாகையநல்லூர் ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சு நடத்தி அளித்த உறுதியின்பேரில்  மக்கள் கலைந்து சென்றனர் மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT